புதுக்கோட்டை அருகே புன்னகை அறக்கட்டளை சார்பில் 2000 பனை விதைகள் நடவு!



புதுக்கோட்டையில் புன்னகை அறக்கட்டளை சார்பில் தமிழ் மரம் நட்டல் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் பனை விதைகள் நடும் விழாவின் தொடக்கமாக மாங்கோட்டை ஊராட்சி, மாங்கோட்டை புதுக்குளத்தில் 2000 பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.

இதனை புதுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் வை.முத்துராஜா அவர்கள் தலைமை ஏற்று துவக்கி வைத்தார்.


இந்நிகழ்வில் புன்னகை அறக்கட்டளையின் கௌரவத் தலைவர் ஜெகன் ஜி, மாவை பாலு ஆ‌கியோ‌ர் முன்னிலை வகித்தனர். மேலும் அறங்காவலர் அப்பாச்சாமி, வடிவேலு, திருமயம் தொகுதி ஒருங்கினைப்பாளர் தமிழ் ஓவியம், புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தனபால், நகர பொருப்பாளர் இதயம்முரளி, ஆவுடையார்கோவில் பொருப்பாளர் விக்னேஷ்வரன், மாங்கோட்டை திமுக ஒன்றிய இளைஞரணி முருகேஷ், ஒன்றிய பிரதிநிதி ரெங்கசாமி, ரவிச்சந்திரன் கிளை செயலாளர், மாங்கோட்டை மணிகண்டன், செல்வம், தமிழ் பிளக்ஸ் அஜித் ஆகியோர் கலந்து கொண்டு பனை விதைகளை நடவு செய்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments