கோபாலப்பட்டிணத்தில் 2 இடங்களில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் ஆர்வத்துடன் பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக மூன்றாவது மாபெரும் தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் இன்று (26-9-2021) நடைபெற்றது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள
கோபாலப்பட்டிணத்தில் அரசின் வழிகாட்டுதலின்படி மாபெரும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் 26.09.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00மணி முதல் இரவு 7.00மணி வரை
கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசல் ,கோபாலப்பட்டிணம் காட்டுக்குளம் பள்ளிவாசல் அருகில் உள்ள பால்வாடியில் கொரனோ தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
முகாமில் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர். பொதுமக்கள்
வரிசையில் காத்திருந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இம்முகாமில் 83 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளி - 50
கோபாலப்பட்டிணம் காட்டுப்பள்ளி பால்வாடி - 33
மொத்தம் - 83
குறிப்பு:
கோபாலப்பட்டிணத்தில் நடக்கும் தடுப்பூசி முகாமில் உங்களால் கலந்து கொள்ள முடியவில்லை என்றால் மீமிசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினமும் கொரோனா தடுப்பூசி போடப்படும் நீங்கள் அங்கு சென்று கேட்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்
தடுப்பூசி செலுத்த போகும் போது தங்களது ஆதார் அட்டையை எடுத்து செல்லும்படி கேட்டுக்கொள்கிறோம்.
வெளிநாடுகளுக்கு செல்ல கூடியவர்கள் பாஸ்போர்ட் எடுத்து கொண்டு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
உயிர் கவசம் தடுப்பூசி என்பதை மறவாதீர்!
முகக்கவசம் அணிவோம்!
சமூக இடைவெளியினை பின்பற்றுவோம்!
கிருமி நாசினி மூலம் கைகளை சுத்துப்படுத்துவோம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.