கீரமங்கலம், கொத்தமங்கலம் உள்பட சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் வரப்புகளிலும், ஊடு பயிராகவும் எலுமிச்சை, மிளகு மற்றும் முருங்கை மரங்களும் வளர்க்கப்பட்டு வருகிறது.
கீரமங்கலம் பகுதியில் விளையும் முருங்கைக்காய்கள் கும்பகோணம், தஞ்சாவூர், மதுரை, ஒட்டன்சத்திரம் ஆகிய ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒரு கிலோ ரூ.10-க்கும் குறைவாகவே விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இதுகுறித்து கீரமங்கலம் பகுதி விவசாயிகள் கூறும் போது, கீரமங்கலம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் முருங்கை மரங்கள் வளர்க்கப்படுகிறது. 10 ஆண்டுக்கு முன்பு வரை ஒரு நாளைக்கு சுமார் 25 டன் வரை முருங்கைக்காய் உற்பத்தி செய்யப்பட்டு பல ஊர்களுக்கு லாரிகளில் அனுப்பப்பட்டது.
ஆனால் தற்போது உற்பத்தி குறைந்திருக்கும் நிலையில் கட்டுப்படியான விலை கிடைக்காததால் பருவத்தில் காய் பறிக்காமல் மரங்களிலேயே முற்றி காய்ந்து கொண்டிருக்கிறது என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.