ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டபணிகள் திட்டத்தின் சார்பில் தேசிய ஊட்டச் சத்து வார விழாவையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ஊர்வலம் ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனை முன்பு தொடங்கி தெற்குவீதி வழியாக வந்து குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தை வந்தடைந்தது. ஊர்வலத்தை ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா ராஜமாணிக்கம் தொடங்கி வைத்தார்.
ஊர்வலத்தில் ஆரோக்கிய வாழ்க்கை கல்வி, குழந்தை பிறந்த 1 மணி நேரத்திற்குள் சீம்பால் கொடுக்க வேண்டும், 6 மாதம் முதல் 2 வயது வரை இணை உணவு மற்றும் துணை உணவு தாய் பாலுடன் சேர்த்து கொடுக்க வேண்டும். சரிவிகித உணவுகளைக் கொடுத்து குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளை தவிர்க்க வேண்டும்.
இதில் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் வசந்தி மற்றும் மேற்பார்வையாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.