அரசு போக்குவரத்து கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு! புதுகை மாவட்ட ஆட்சியர் தகவல்!!



தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) சார்பில் ஒரு வருட தொழில் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக வரவேற்கப்படுகின்றன.

தொழில் பழகுனர் பயிற்சி வாரியம் (தென் மண்டலம்) இணைந்து இணையதளம் மூலமாக தகுதியான பொறியியல் பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு (எந்திரவியல், தானியியங்கியல்) 2019, 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களிடமிருந்து ஒரு வருட தொழில் பயிற்சிக்காக விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக வரவேற்கப்படுகிறது. 

மேலும், விவரங்களுக்கு www.boat.srp.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் அடுத்த மாதம் (அக்டோபர்) 16-ந் தேதியாகும் என கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments