புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் பிரிவு தரைத்தளத்தில் அவசர அறுவை சிகிச்சை அரங்கு அருகில் வலி மற்றும் நோய் தணிப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தை கல்லூரி முதல்வர் டாக்டர் பூவதி திறந்து வைத்தார். அப்போது அவர் கூறுகையில், நோய் முற்றிய நிலையில் உள்ள பக்கவாதம், புற்றுநோய் போன்ற தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் தணிப்பு மற்றும் வலி நிவாரண சிகிச்சை அளிக்கப்படும் என்றார்.
அதனைத்தொடர்ந்து இந்த மையத்தின் அருகிலேயே பூந்தோட்டம் ஏற்படுத்தி புதிதாக மலர்ச்செடிகள் நடப்பட்டது. மையத்திற்கு நோய் முற்றிய நிலையில் வலி மற்றும் நோய் தணிப்பு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் சிகிச்சை முடிந்து மனதால் தங்களை ஆற்றுப்படுத்திக்கொள்ள `பசுமை நிறைந்த இன்பவனம்' என்ற பெயரில் இந்த பூந்தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
விழாவில் கல்லூரி துணை முதல்வர் டாக்டர் கலையரசி, நிலைய முதல்வர் டாக்டர் இந்திராணி மற்றும் பேராசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.