புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 1-ந்தேதி முதல் 9, 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு அரசின் அனைத்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன.
அனைத்து பள்ளிகளிலும் அரசின் அனைத்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடைபெறுகிறதா? என பள்ளிகளில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, பள்ளிகளை ஆய்வு செய்யும்போது சில பள்ளிகள் அரசின் அனைத்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றாதது தெரிய வருகிறது. எனவே இனி பள்ளிகளை பார்வையிட்டு ஆய்வு செய்யும்போது அரசின் அனைத்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை சரிவர பின்பற்றாதது தெரிய வந்தால் அது சம்பந்தமாக பள்ளிக்கல்வி ஆணையர், கலெக்டர் ஆகியோருக்கு அறிக்கை அனுப்பப்பட்டு அதன்வாயிலாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே அனைத்து பள்ளிகளும் அரசின் அனைத்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை சரிவர பின்பற்ற வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாமி.சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.