ஆவுடையார்கோவில் ஒன்றியம் பாண்டி பத்திரம் ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணியை அதிகாரி ஆய்வு செய்தார்.
தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் மழைநீர் தேங்குவதால் பொதுமக்களுக்கு பல்வேறு தொற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதைத் தொடர்ந்து ஊராட்சிகளில் உள்ள வடிகால் வாய்க்கால்கள், சாக்கடை, கால்வாய்கள் 20-ந் தேதி முதல் 25-ந் தேதிமுடிய ஒரு வார காலத்திற்கு மெகா மழைநீர் வடிகால் தூய்மை பணி முகாம் நடத்தி கழிவுநீர் கால்வாய்கள், மழைநீர் கால்வாய்கள் தூய்மைபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அறிவுரைப்படி ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், மழைநீர் வடிகால் வாய்க்கால்கள், சாக்கடை வடிகால் வாய்க்கால் தூய்மைப்படுத்தும் பணி தொடங்கப்பட்டு வேலைகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் (கி. ஊ) பெரியசாமி ஒன்றிய அளவில் நடைபெறும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாண்டி பத்திரம் ஊராட்சியில் தூய்மைப்படுத்தும் பணியை ஆய்வு செய்தபோது ஊராட்சி தலைவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உடனிருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.