கூட்டத்திற்கு மாநில தலைவர் நெல்லை முபராக் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தேசிய துணை தலைவர் தெஹ்லான்பாகவி, தேசிய பொதுச்செயலாளர்கள் அப்துல் மஜித், இலியாஸ் முகமது தும்பே ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
செங்கல்பட்டு, காஞ்சீபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் எஸ்.டி.பி.ஐ. கட்சி தனித்து போட்டியிடுகிறது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ள நாடுதழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பது, குடியுரிமை திருத்த சட்டம், வேளாண் சட்டம், நீட் தேர்வு ஆகியவற்றிற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு பாராட்டு தெரிவிக்கின்றோம். வெறும் தீர்மானத்தோடு நின்று விடாமல் மற்ற மாநிலங்களையும் ஒருங்கிணைத்து சட்டப்போராட்டத்தையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்பன உள்பட 6 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.ம.மு.க.வுடன் கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தலில் அக்கட்சி தனித்து போட்டியிடுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.