கறம்பக்குடி அருகே உள்ள முள்ளங்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவிக்கு கடந்த 2 நாட்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையொட்டி நேற்று முன்தினம் பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் 202 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்கான சளி மாதிரி சேகரிப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பட்டது.இதைதொடர்ந்து நேற்று பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.
இந்நிலையில் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடந்த பரிசோதனையில் முள்ளங்குறிச்சி பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் 202 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி ஆனது.
இதனால் பள்ளி இன்று (புதன்கிழமை) முதல் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையொட்டி நேற்று முள்ளங்குறிச்சி அரசு பள்ளியில் கறம்பக்குடி தாசில்தார் விஸ்வநாதன், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தார். பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.