புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இந்த விசைப்படகில் தினந்தோறும் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்வது வழக்கம்.
இந்நிலையில் இப்பகுதியை சேர்ந்த விசைப்படகுகள் அரசால் தடைசெய்யப்பட்ட இரட்டை மடி மற்றும் எடை குண்டு பயன்படுத்தி மீன் பிடிப்பதாக மீன்வளத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பேரில் நேற்று இப்பகுதியில் புதுக்கோட்டை மீன்வளத்துறை உதவி இயக்குனர் சின்ன குப்பன், அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் சதீஷ் ஆகியோர் மீன்பிடித்துக் கொண்டு கரை திரும்பிய கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மூன்று விசைப்படகுகள் அரசால் தடைசெய்யப்பட்ட இரட்டை மடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களின் வலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலை பயன்படுத்தி மீன் பிடித்ததாக 3 விசைப்படகுகள் மீது மீன்வளத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.