மணமேல்குடி ஒன்றிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய மழை பெய்தது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகப்படியாக மணமேல்குடி பகுதிகளில் 185 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் குளம், குட்டைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாமல் விவசாயம் செய்ய யோசனையில் இருந்த மக்களுக்கு தற்போது பெய்த மழை வரப்பிரசாதமாக உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மழை அளவு
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:-
மணமேல்குடி -185, ஆதனக்கோட்டை -45, பெருங்களூர் - 78, புதுக்கோட்டை- 95, ஆலங்குடி - 87, கந்தர்வகோட்டை -24, கறம்பக்குடி - 35.20, மழையூர் -78.40, கீழணை - 38.20, திருமயம் - 42, அரிமளம் - 82.40, அறந்தாங்கி - 27.20, ஆயிங்குடி - 67.40, நாகுடி -64.20, மீமிசல் -78.20, ஆவுடையார் கோவில்-80.20, இலுப்பூர் -10, குடுமியான்மலை -49, அன்னவாசல் -38, விராலிமலை -17, உடையாளிப்பட்டி-9.40, கீரனூர் -30, பொன்னமராவதி -110, காரையூர் -51
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.