புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அரசின் சேவைகளை பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்லும் வண்ணமாகவும், பொதுமக்களின் குறைகளை களைந்திடவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டதன் பேரில்,
ஆவுடையார்கோயில் தாலுகா மீமிசல் கிராமத்தில் 27.10.2021 அன்று காலை 11.00 மணியளவில் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் சிறப்பு முகாம் மீமிசல் கிழக்கு கடற்கரைச் சாலையில் உப்பளம் அருகே அமைந்திருக்கும் புயல் பாதுகாப்பு கட்டடிடத்தில் நடைபெறவுள்ளது. இதில் கணினி நில ஆவணத்தில் பின்வரும் குறைகள் இருப்பின் உடன் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
1. புல எண்கள் / உட்பிரிவு எண்களில் திருத்தம்
2. பரப்பு திருத்தம்
3. பட்டாதாரர்கள் பெயர்கள் மற்றும் தந்தை / பாதுகாவலன் பெயர்கள் திருத்தம்
4. உறவு முறை திருத்தம்
5. பட்டாவில் விடுபட்ட விபர திருத்தம் 6. பரப்பு / பெயர் ஆகியவை அருகிலுள்ள பட்டாதாரர்களின் பெயர்களுடன் மாறியிருப்பது தொடர்பான திருத்தம்
மேற்படி குறைபாடுகள் குறித்து மனு செய்யும்போது, தற்போதைய கணினி சிட்டா, தொடர்புடைய பதிவு கிரைய ஆவணங்கள் மற்றும் 1970 ஆம் ஆண்டு முதல் நாளது தேதி வரை பெறப்பட்ட வில்லங்க சான்று மற்றும் இதர ஆவணங்கள் இருப்பின் அதனையும் இணைத்து மனு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
முகாம் நடைபெறும் இடம் :
புயல் பாதுகாப்பு கட்டடிடம் கிழக்கு கடற்கரைச் சாலை மீமிசல், ஆலத்தூர்
நாள்: 27.10.2021 (புதன்கிழமை)
இப்படிக்கு...
வட்டாட்சியர், ஆவுடையார்கோவில்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.