மீமிசல் அருகே தீக்குளித்த பிளஸ்-2 மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு



புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள ஆர் புதுப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகள் ஸ்ரீநிதி (வயது 16). இவர் பிளஸ்-2 படித்து வந்தார். 

கடந்த 25-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மணமேல்குடி தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி ஸ்ரீநிதி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மீமிசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments