வங்கக்கடலில் அதிக காற்று வீசக்கூடும் என்பதால் கிழக்கு கடற்கரை சாலை விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!



புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதியில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம்.

இந்தநிலையில் வங்கக்கடலில் அதிக காற்று வீசக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (சனிக்கிழமை) விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடிக்க மீன்வளத்துறையினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதனால் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments