கோபாலப்பட்டிணத்தில் அனாதையாக சுற்றி திரியும் குதிரை!



கோபாலப்பட்டிணத்தில் அனாதையாக குதிரை ஒன்று சுற்றி திரிகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் கடந்த சில நாட்களாக குதிரை ஒன்று சுற்றித் திரிகிறது. 

இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில்,

கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக இந்த குதிரை இங்கு சுற்றித் திரிகிறது. குதிரையின் உரிமையாளர்கள் யார் என்று தெரியவில்லை. குதிரை சாலைகளில் சுற்றி திரிந்து பொதுமக்களை தொந்தரவு செய்கின்றன.  

இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு கடைக்குள் புகுந்து தொந்தரவு செய்தது, அவ்வப்போது சிறுவர்களை தாக்க முயற்சி செய்கிறது. எனவே குதிரை உரிமையாளர்கள் உடனடியாக அழைத்து செல்லமாறு அப்பகுதி மக்கள் கூறினார்கள்.

இந்த குதிரையை சிறுவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments