கோபாலப்பட்டிணத்தில் சாரல் மழை






தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக வங்க கடலில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதியில் நிலவி வருகிறது.

இதன் காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் உட்பட  14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சி மீமிசல்  அருகே உள்ள  கோபாலப்பட்டிணத்தில்  இன்று அக்டோபர் 30 சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் இலேசான சாரல் மழை பெய்து வருகிறது வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. பள்ளமான இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. 
கோபாலப்பட்டிணத்தில் அவ்வப்போது கருமேகங்கள் சூழ்ந்து  மலைப்பிரதேசம் போல குளிர் நிலவி வருகிறது.

இதனால் கோபாலப்பட்டிணம் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments