சவுதி அரேபியா ரியாத் நியூ செனையா பகுதியில் பணிபுரிந்து வந்த கோவை குறிச்சி சுந்தராபுரம் காந்திஜி தெருவை சேர்ந்த பரமசிவம் அவர்களுடைய மகன் சண்முகம் (வயது 49) என்பவர் கடந்த 28.09.2021 செவ்வாய்க்கிழமை அன்று மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டார்.
அவருடன் பணிபுரிந்த, IWF செயற்குழு உறுப்பினர் முத்துப்பேட்டை சகாபுதீன் அவர்கள் மண்டல செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் அவர்களுக்கு தகவலை தர, மண்டல சமூக நலத்துறை துணைச் செயலாளர் அறந்தை சித்திக் அவர்களுடன் IWF செயற்குழு உறுப்பினர் முத்துப்பேட்டை சகாபுதீன் இணைந்து இந்திய தூதரக உதவியுடன் ஒரு வாரத்திற்குள் இறந்த உடலை விமானம் மூலம் கொச்சி விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
கொச்சி விமான நிலையத்தில் சண்முகத்தின் மகன் நவீன் மற்றும் தமுமுக மருத்துவ அணி மாநில துணைச் செயலாளர் முகமது ரபிக், கோவை மத்திய மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சதாம் உசேன், பொருளாளர் ஜியாவுல் ஹக், துணை செயலாளர் ஆம்புலன்ஸ் டிரைவர் சபியுல்லா ஆகியேர் சண்முகத்தின் உடலை பெற்று கோவை மாவட்ட தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
இறந்த உடலைப் பெற்றுக் கொண்ட சண்முகத்தின் குடும்பத்தினர் சண்முகத்தின் உடலை தாயகத்திற்கு அனுப்பி வைப்பதற்காக எங்களுக்கு உதவி செய்த இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் ரியாத் மத்திய மண்டல நிர்வாகிகளுக்கும் கொச்சி விமான நிலையத்திலிருந்து கோவை மாநகருக்கு கொண்டு வர உதவிய கோவை மாவட்ட தமுமுக மற்றும் மமகவினர்க்கு நன்றி கூறினார்கள்.
தகவல்
ஊடகப்பிரிவு இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்
மத்திய மண்டலம்,
ரியாத்,
சவுதி அரேபியா.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.