புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைக்கோடியில் கிழக்கு கடற்கரைச் சாலையையொட்டி அமைந்திருக்கிறது மணமேல்குடி (கோடியக்கரை) கடற்கரை.
இது நாகப்பட்டினம் கோடியக்கரையல்ல, புதுக்கோட்டையில் இருக்கிற கோடியக்கரை. மணமேல்குடி பேருந்து நிறுத்தத்தின் அருகிலேயே ஒரு தார்ச் சாலை செல்கிறது. அந்தப் பாதையை அப்படியே பிடித்துச் சென்றால் சிறிது தூரத்தில் முந்திரி, தைலமரக்காடுகள் நம் கண்ணிற்குத் தென்படுகின்றன. அப்படியே இன்னும் சற்று தூரத்தைக் கடந்ததும் கடற்கரையையொட்டி வந்துவிட்டோம் என்பதை அறிந்துகொள்ளும் வகையில் கடற்கரைக் காற்று நம்மைக் குளிர வைக்கிறது.
மணமேல்குடி
கோடியக்கரை
மணமேல்குடி கோடியக்கரையிலிருந்து நூற்றுக்கணக்கான மீனவர்கள் நாட்டுப்படகில் மீன் பிடிக்கச் செல்கின்றனர். இயற்கைக் காற்றினை சுவாசித்தவாறு தொடர்ந்து சென்றால், கடற்கரையின் ஓரத்தில் அமர்ந்தவாறு மீனவர்கள் வலைகளைப் பிரித்தெடுத்தடுத்தல், படகினைத் தயார்ப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அங்கிருந்து சிறிது தூரம் கடந்தால், கோடியக்கரை கடற்கரையினை நாம் ஏரியல் வியூவில் நாம் கண்டு ரசிக்கலாம். கடற்கரையையொட்டி, விநாயகர் கோயில் ஒன்று இருக்கிறது. கடற்கரையில் இறங்கினால், அலைகள் நமது காலை வருடிச் செல்கின்றன. பெரிதாக அலைகள் இல்லை. காலை நனைத்த உடனே, குளித்துவிட்டுச் செல்வோம் என்ற மனநிலை ஏற்பட்டு விடுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.