அறந்தாங்கி அரசு மருத்துவமனை வாயிலில் மாடுகள் மருத்துவமனைக்குள் நுழையாமல் இருக்க அமைக்கப்பட்ட இரும்பு குழாய்களுக்கு இடையே சிக்கிய பெண்ணை தீய ணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர் மீட்டனர்.
அறந்தாங்கி அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் மாடுகள் வருவதை தடுக்க மருத்துவமனை நுழைவு வாயிலின் வழியில் சிறிய இடைவெளியுடன் இரும்பு குழாய்கள் பொறுத்தப்பட்டு வழி அமைக்கப்பட்டது.
இந்நிலையில் இரும்பு குழாய்கள் மீது வாகனங்கள் சென்று வருவதால், குழாய்களுக்கிடையே இடைவெளி அதிகரித்தது. இந்நிலையில் நேற்று மருத்துவமனைக்குசென்றொரு பெண்ணின் கால் இரும்பு குழாய்களுக்கு இடையே சிக்கிக்கொண்டது. அவர் எவ்வளவோ முயன்றும் காலை வெளியே எடுக்க முடியவில்லை.
உடனே அக்கம்பக்கத் தில் உள்ளவர்கள் இச்சம்ப வம் குறித்து அறந்தாங்கி தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை யினர் விரைந்து சென்று,குழாய்களை வளைத்து இடைவெளியை அதிகரித்து குழாய்களுக்கு இடையின் சிக்கிய பெண்ணை காயமின்றி மீட்டனர்.
அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதால் மருத்துவமனை நிர்வாகம் நுழைவு வாயிலில் அமைக் கப்பட்டுள்ள இரும்பு குழாய்களை முறையாக சீரமைத்து பொதுமக்களின் கால்கள் அந்த குழாய்களுக்கு இடையே சிக்காத வகையில் அமைக்க வேண்டும் என பொது மக்களும் நோயாளிகளும் கோரிக்கை விடுத்துள்ளர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.