தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் தனியார் மருத்துவமனையில் உள்ள மருந்துக்கடையில் அரிவாளைக் காட்டி மிரட்டி, மாத்திரையை எடுத்துச் சென்ற இளைஞர்கள் இருவர் 2 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டனர்.
தூக்கத்திற்கு பயன்படும் மாத்திரையை போதைக்கு பயன்படுத்துவதற்காக அவர்கள் கேட்டதாக கூறப்படுகிறது. மருத்துவர் சீட்டு இல்லாமல் கேட்டதால், அந்த மாத்திரையை தர ஊழியர்கள் தர மறுத்துள்ளனர்.
இதையடுத்து ஒருவன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை காட்டி மிரட்டி கடைக்குள் புகுந்து மேசையில் எடுத்து வைத்திருந்த மாத்திரைகளை எடுத்துக் கொண்டு, இருவரும் தப்பி ஓடினர். மருத்துவமனை ஊழியர்கள் விரட்டிய போதும் அவர்கள் தப்பி ஓடி விட்டனர்.
இது தொடர்பான புகாரில் சிசிடிவி காட்சி அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், பண்ணவயல் கிராமத்தைச் சேர்ந்த ஹரிகரன் பட்டுக்கோட்டையை ராஜேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
சம்பவம் நடந்த 2 மணி நேரத்தில் குற்றவாளிகளைப் பிடித்த பட்டுக்கோட்டை டி.எஸ்.பி. செங்கமலக்கண்ணன் மற்றும் காவலர்களை தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரவளிபிரியா பாராட்டினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.