ஊராட்சி செயலாளர் மாற்றப்பட்டதை கண்டித்து கறம்பக்குடியில் ஊராட்சி தலைவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கறம்பக்குடி அருகே உள்ள ராங்கியன் விடுதியில் ஊராட்சி செயலாளராக கரிகாலன் (வயது 45) பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு கறம்பவிடுதி ஊராட்சி செயலாளராக இடமாறுதல் செய்யப்பட்டார். இதுகுறித்து ராங்கியன்விடுதி ஊராட்சி தலைவரிடம் ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில் தகவல் தெரிவிக்க வில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 20-க்கும் மேற்பட்ட ஊராட்சி தலைவர்கள் திரண்டு வந்து, ராங்கியன் விடுதி ஊராட்சி செயலாளர் மாற்றப்பட்டது குறித்து ஒன்றிய அதிகாரிகளிடம் காரணம் கேட்டனர். அதற்கு அதிகாரிகள் நிர்வாக காரணம் என பதில் அளித்தாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய நிர்வாகம் உரிய விளக்கம் அளிக்கவில்லை என கூறியும், ஊராட்சி தலைவர்களின் உரிமை பறிக்கப்படுவதாக தெரிவித்தும் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே கறம்பக்குடி - புதுக்கோட்டை சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சாலையில் இரு பக்கமும் வாகனங்கள் வரிசை கட்டி நின்றன.
இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி தாசில்தார் விஸ்வநாதன் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட ஊராட்சி தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சாலை மறியலை கைவிட்டு ஊராட்சி தலைவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.