புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் 54-வது தேசிய நூலக வார விழா போட்டிகள் மாவட்ட மைய நூலகத்தில் நடத்தப்படுகிறது.
இதனை முன்னிட்டு மாணவர்களுக்கும், வாசகர்களுக்கும் நாளை (14-ந் தேதி) முதல் 20-ந் தேதி வரை பல்வேறு போட்டிகள் நடைபெறுகிறது. அதன்படி நாளை 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய ஓவியம் வரைதல் போட்டி நடைபெறுகிறது.
16-ந் தேதி 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு, `பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்போம்' என்ற தலைப்பில் பேச்சு போட்டி நடைபெறுகிறது.
18-ந் தேதி 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு, `என்னை செதுக்கிய புத்தகம்' பற்றிய கட்டுரைப்போட்டி நடைபெறும்.
20-ந் தேதி வாசகர்களுக்கு படம் பார்த்து கதை, கவிதை மற்றும் கட்டுரை எழுதும் போட்டி நடைபெறுகிறது.
இந்த போட்டிகளில் முதல் 3 இடங்களை பெறுபவர்களுக்கு தேசிய நூலக வார நிறைவு விழாவில் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது. மேற்கண்ட தகவலை புதுக்கோட்டை மாவட்ட மைய நூலக முதல்நிலை நூலகர் சசிகலா தெரிவித்துள்ளார்.
இது குறித்த மேலும் விவரங்களுக்கு 04322-243484, 9443532633 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.