புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணத்தினால் தலைமை ஆசிரியர்கள் பேரிடர் காலங்களில் பொதுமக்களின் நலன்கருதி வருவாய்த்துறையினர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் பள்ளிக்கட்டிடங்களின் சாவிகளை ஒப்படைக்க வேண்டும். அவர்களிடம் மின்மோட்டார் மற்றும் குடிநீர் போன்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
பள்ளி வளாகத்தில் அனைத்து வகுப்பறைகளிலும் மின் சாதனங்களின் பாதுகாப்பினை தலைமை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும். பழுதடைந்த கட்டிடங்களுக்கு அருகில் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் செல்லாத வண்ணம் பாதுகாப்பான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மாணவர்கள் குளம் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகில் செல்லாத வகையில் தகுந்த அறிவுரைகள் கூற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கறம்பக்குடியில் நரிக்குறவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பள்ளியை முதன்மை கல்வி அதிகாரி பார்வையிட்டார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.