வங்கி அதிகாரி போல பேசி வாலிபரிடம் ரூ.1¼ லட்சம் மோசடிசைபர் கிரைம் போலீசார் விசாரணை




வங்கி அதிகாரி போல பேசி வாலிபரிடம் ரூ.1¼ லட்சம் மோசடிசைபர் கிரைம் போலீசார் விசாரணை

புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 37). இவரது செல்போன் எண்ணிற்கு பேசிய மர்மநபர் ஒருவர், தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து அதிகாரி பேசுவது போல பேசியுள்ளார். மேலும் அவர் பயன்படுத்தி வரும் கிரெடிட் கார்டின் விவரங்களை கேட்டுள்ளார். இதனை நம்பி பழனிசாமி விவரங்களை தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அவர் பயன்படுத்தி வந்த 2 வங்கிகளின் கணக்கில் இருந்து பல்வேறு தடவை பணம் எடுக்கப்பட்டதை அறிந்தார். தன்னிடம் பேசிய மர்மநபர் நூதன முறையில் தனது வங்கி கிரெடிட் கார்டின் விவரத்தை அறிந்து மொத்தம் ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்து 370 மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் பழனிசாமி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கியில் இருந்து பேசுவது போல பேசி ஆன்லைனில் பணம் மோசடி செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் உஷாராக இருக்கும்படி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments