குடுமியான்மலை அருகே கண்மாய் தண்ணீரில் இறந்தவர் உடலை மயானத்திற்கு பொதுமக்கள் சுமந்து செல்கின்றனர். மாற்றுப்பாதை அமைத்துதரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்னவாசல்:
பாதை வசதி இல்லை
புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை அருகே உள்ள எழுவச்சிப்பட்டி கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பொதுமக்களின் தேவைக்காக அந்த ஊரிலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் மயானம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு செல்வதற்கு பாதை இல்லாததால் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கருவேல காடுகள் மற்றும் கண்மாய் நீரை கடந்து மிகுந்த சிரமங்களுக்கிடையே கிராமத்தில் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை அப்பகுதி மக்கள் அடக்கம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
உடலை சுமந்து செல்லும் அவலம்
இந்நிலையில் நேற்று அந்த கிராமத்தை சேர்ந்த நாகராஜன் என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். ஆனால் மயானத்திற்கு செல்ல சாலை இல்லாததால் அவரது சடலத்தை தோளில் சுமந்தபடி மழையால் நிறைந்திருக்கும் கண்மாய் நீரை கடந்து பெரும் அவதியோடு நடந்து சென்று 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மயானத்தில் கொண்டு சென்று அக்கிராம மக்கள் அடக்கம் செய்தனர். தங்களது துயரம் தொடரும் நிலையில் அரசும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து மயானத்திற்கு செல்ல முறையான சாலை வசதி அமைத்துத் தரவேண்டும் அல்லது சாலை வசதி உள்ள இடத்தில் மயானத்தை அமைத்து தர வேண்டும் என வேதனையோடு கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.