குடுமியான்மலை அருகே மயானத்திற்குகண்மாய் தண்ணீரில் இறந்தவரின் உடலை சுமந்து செல்லும் பொதுமக்கள்மாற்றுப்பாதை அமைத்துதர கோரிக்கை




குடுமியான்மலை அருகே கண்மாய் தண்ணீரில் இறந்தவர் உடலை மயானத்திற்கு பொதுமக்கள் சுமந்து செல்கின்றனர். மாற்றுப்பாதை அமைத்துதரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அன்னவாசல்:
பாதை வசதி இல்லை 
புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை அருகே உள்ள எழுவச்சிப்பட்டி கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பொதுமக்களின் தேவைக்காக அந்த ஊரிலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் மயானம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு செல்வதற்கு பாதை இல்லாததால் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கருவேல காடுகள் மற்றும் கண்மாய் நீரை கடந்து மிகுந்த சிரமங்களுக்கிடையே கிராமத்தில் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை அப்பகுதி மக்கள் அடக்கம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
உடலை சுமந்து செல்லும் அவலம்
 இந்நிலையில் நேற்று அந்த கிராமத்தை சேர்ந்த நாகராஜன் என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். ஆனால் மயானத்திற்கு செல்ல சாலை இல்லாததால் அவரது சடலத்தை தோளில் சுமந்தபடி மழையால் நிறைந்திருக்கும் கண்மாய் நீரை கடந்து பெரும் அவதியோடு நடந்து சென்று 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மயானத்தில் கொண்டு சென்று அக்கிராம மக்கள் அடக்கம் செய்தனர். தங்களது துயரம் தொடரும் நிலையில் அரசும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து மயானத்திற்கு செல்ல முறையான சாலை வசதி அமைத்துத் தரவேண்டும் அல்லது சாலை வசதி உள்ள இடத்தில் மயானத்தை அமைத்து தர வேண்டும் என வேதனையோடு கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments