இயல்பு நிலை திரும்பியதால் ஐந்து நாட்களுக்குப் பிறகு மீன்பிடிக்கச் சென்ற கோபாலப்பட்டிணம் மீனவர்கள்!



காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் தொடர் மழை காரணமாக கடந்த 8-ந் தேதி முதல் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாத நிலையில், மீன்வளத் துறை அனுமதி அளித்ததை அடுத்து கோபாலப்பட்டிணம் மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகில் உள்ள கடற்கரை கிராமமான கோபாலப்பட்டிணத்தில் 100-க்கும் மேற்பட்ட நாட்டுப்டகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் தொடர் மழை காரணமாக கடந்த 8-ந் தேதி முதல் மீனவர்களுக்கு மீன் பிடிப்பதற்கான அனுமதி  வழங்கப்படவில்லை. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.

இந்நிலையில் மழை ஓய்ந்து இயல்புநிலை திரும்பியுள்ளதால் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த நாட்டு படகு மீனவர்கள் நேற்று (சனிக்கிழமை) கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இதேபோல கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் நேற்று (சனிக்கிழமை) கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் தொடர் மழை காரணமாக கடந்த 8-ந் தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க மீன்வளத் துறையினரால் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் விசைப்படகு மீனவர்கள் தங்கள் படகுகளை கரையோரம் வரிசையாக நிறுத்தி வைத்திருந்தனர். இந்நிலையில் மழை ஓய்ந்து இயல்புநிலை திரும்பியுள்ளதால் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் நேற்று (சனிக்கிழமை) கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments