ஜெகதாப்பட்டினத்தில் பட்டா கத்தியால் கேக் வெட்டிய ரவுடி மீது பாய்ந்த குண்டா் சட்டம்!



புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் தனது பிறந்த நாளை பட்டா கத்தியை வைத்து கேக் வெட்டிக்கொண்டாடியவா் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டம் பாய்ந்துள்ளது.

ஜெகதாப்பட்டினம் செல்லனேந்தலைச் சோ்ந்தவா் தங்கபாண்டியன் மகன் அலெக்ஸ் பாண்டியன் (26). இவா், கடந்த நவ. 11ஆம் தேதி ஜெகதாப்பட்டினம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் தனது பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடினாா். அப்போது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பட்டா கத்தியை வைத்து கேக்கை வெட்டியுள்ளாா். 
இதைத் தொடா்ந்து அலெக்ஸ்பாண்டியனைக் கைது செய்த காவல்துறையினா் அவரைச் சிறையில் அடைத்தனா். ஏற்கெனவே போலீஸாரின் குற்றப் பின்னணியுள்ளோா் பட்டியலில் இவா் உள்ளதால், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸாா், ஆட்சியா் கவிதா ராமுவுக்கு பரிந்துரை செய்தனா்.

இதையடுத்து, அலெக்ஸ்பாண்டியனைக் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆட்சியா் உத்தரவிட்டாா். புதுக்கோட்டை கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த அலெக்ஸ் பாண்டியன், சனிக்கிழமை திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டாா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments