புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் தனது பிறந்த நாளை பட்டா கத்தியை வைத்து கேக் வெட்டிக்கொண்டாடியவா் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டம் பாய்ந்துள்ளது.
ஜெகதாப்பட்டினம் செல்லனேந்தலைச் சோ்ந்தவா் தங்கபாண்டியன் மகன் அலெக்ஸ் பாண்டியன் (26). இவா், கடந்த நவ. 11ஆம் தேதி ஜெகதாப்பட்டினம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் தனது பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடினாா். அப்போது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பட்டா கத்தியை வைத்து கேக்கை வெட்டியுள்ளாா்.
இதைத் தொடா்ந்து அலெக்ஸ்பாண்டியனைக் கைது செய்த காவல்துறையினா் அவரைச் சிறையில் அடைத்தனா். ஏற்கெனவே போலீஸாரின் குற்றப் பின்னணியுள்ளோா் பட்டியலில் இவா் உள்ளதால், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸாா், ஆட்சியா் கவிதா ராமுவுக்கு பரிந்துரை செய்தனா்.
இதையடுத்து, அலெக்ஸ்பாண்டியனைக் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆட்சியா் உத்தரவிட்டாா். புதுக்கோட்டை கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த அலெக்ஸ் பாண்டியன், சனிக்கிழமை திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டாா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.