தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் கடன் மேளா கலெக்டர் தகவல்




கூட்டுறவு துறையின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் 136 எண்ணிக்கையிலான தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க்கடன், மத்திய கால விவசாயம் சார்ந்த கடன், நகைக்கடன், சுயஉதவிக்குழு கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், டாம்கோ மற்றும் டாப்செட்கோ கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேற்கண்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாய பயிர்க்கடன், விவசாய நகைக்கடன் மற்றும் கூட்டுப்பொறுப்புக்குழு கடன்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. பயிர்க்கடன்கள் தேவைப்படுவோர் சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை அணுகி பெற்றுக்கொள்ள தெரிவிக்கப்படுகிறது. பயிர்க்கடனை கெடு தேதிக்குள் செலுத்தும் விவசாயிகளுக்கு முழு வட்டி சலுகையாக பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் புதிய உறுப்பினர்களாக தங்களை இணைத்துக்கொண்டு பயிர்க்கடன் பெற்றுக்கொள்ள தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட கடன் விவரங்களை அறிந்துகொள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் 24-ந் தேதியில் நடைபெறும் (டிஜிட்டல் முறையில்) நிதிசார் கல்வி விழிப்புணர்வு முகாம், கடன் மேளா மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம் என கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments