கொலை வழக்கில் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் கூடுதல் தண்டனை பெற்ற வாலிபர் அறந்தாங்கி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
கொலை வழக்கு
புதுக்கோட்டை மச்சுவாடி சிவானந்தபுரம் முதல் வீதியை சேர்ந்தவர் கருப்பையா மகன் பாரதிதாசன் (வயது 32). இவர் மீதான கொலை வழக்கு ஒன்றில் புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 14-ந் தேதி, 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்த தண்டனையை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் பாரதிதாசன் மேல்முறையீடு மனு செய்தார். இதில் அவரது குற்றத்தை உறுதி செய்து தண்டனையை 7 ஆண்டுகளாக உயர்த்தி கடந்த செப்டம்பர் மாதம் 20-ந் தேதி ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. ஆனால், பாரதிதாசன் கோர்ட்டில் அப்போது ஆஜராகவில்லை.
சிறையில் அடைப்பு
இதனால், அவரை கைது செய்ய புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து பாரதிதாசனை கைது செய்த கணேஷ்நகர் போலீசார், மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் அறந்தாங்கி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.