அன்னவாசல் ஒன்றியம் ரெங்கம்மாள் சத்திரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மருத்துவர் சுபாஷ்காந்தி உஷா தம்பதியினர் தங்களின் மகள் விஜய மகிழினியின் பிறந்த நாளையொட்டி அப்பள்ளியில் அரசின் தன்னிறைவுத்திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் வகுப்பறை தொடங்க எண்ணினர். அதற்காக தங்களது சொந்தப்பணம் ரூ.50 ஆயிரத்தை அரசின் தன்னிறைவுத் திட்டத்திற்கு மாவட்ட கலெக்டரிடம் காசோலையாக வழங்கினர். மாவட்ட நிர்வாகமும், ரூ.1 லட்சம் அப்பள்ளிக்கு வழங்கியது. தற்போது ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பறை ஏற்படுத்தப்பட்டது. திறப்பு விழாவில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி தலைமை தாங்கி, ஸ்மார்ட் வகுப்பறையை தொடங்கி வைத்தார். இதில் கவிஞர் தங்கம்மூர்த்தி, மருத்துவர் சுபாஷ்காந்தி, அன்னவாசல் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜோசப் ரோசாரியோ கில்பர்ட், பள்ளித்தலைமையாசிரியை மகாலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.