புதுக்கோட்டை உள்பட 8 மாவட்டங்களில் 27-ந் தேதி மீனவர்கள் உண்ணாவிரதம் அறிவிப்பு




நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்ட மீனவ கிராம பஞ்சாயத்தாரின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் அரசு அறிவுறுத்தலின் பேரில், விசைப்படகுகளில் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட அதிவேக என்ஜின்கள் அகற்றப்பட்டு விட்டது.

ஆனால் அரசால் தடை செய்யப்பட்ட அதிவேக என்ஜின்களை பயன்படுத்தி தொழில் செய்து வரும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ஒரு சில மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்களை கண்டிப்பது, மேற்கண்ட கிராமங்களில் உள்ள விசைப்படகுகளில் இருந்து அதிவேக என்ஜின்களை வருகிற 24-ந் தேதிக்குள்(வெள்ளிக்கிழமை) முழுமையாக அகற்றிட வேண்டும்.

அவ்வாறு அகற்றாவிட்டால் வருகிற 27-ந் தேதி(திங்கட்கிழமை) நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்கால், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபடுவது என்று ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments