அறந்தாங்கி அருகே பத்தரசர்கோட்டையை சேர்ந்தவர் கைலாசம் (வயது 51). விவசாயி. இவரது மகன் சத்திசோமையா (11). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள கம்மங்காடு கண்மாயில் குளிக்க சென்று உள்ளனர். சத்திசோமையா குளித்து விட்டு வீட்டிற்கு வந்து விட்டார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் கைலாசம் வீட்டிற்கு வரவில்லை. சந்தேகம் அடைந்த உறவினர்கள் கைலாசத்தை பல்வேறு இடங்களில் தேடிபார்த்தும் காணவில்லை. இதுகுறித்து அறந்தாங்கி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில், நிலைய அலுவலர் வெற்றிசெல்வன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கண்மாயில் இறங்கி தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.
உடல் மீட்பு
இந்நிலையில் நேற்றும் தேடும் பணி தொடங்கியது. இதையடுத்து நேற்று காலையில், கண்மாய் தண்ணீரில் மூழ்கிய நிலையில் இருந்த கைலாசத்தை தீயணைப்பு வீரர்கள் சடலமாக மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.