அறந்தாங்கி கம்மங்காடு கண்மாயில் மூழ்கி விவசாயி பலி




அறந்தாங்கி அருகே பத்தரசர்கோட்டையை சேர்ந்தவர் கைலாசம் (வயது 51). விவசாயி. இவரது மகன் சத்திசோமையா (11). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள கம்மங்காடு கண்மாயில் குளிக்க சென்று உள்ளனர். சத்திசோமையா குளித்து விட்டு வீட்டிற்கு வந்து விட்டார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் கைலாசம் வீட்டிற்கு வரவில்லை. சந்தேகம் அடைந்த உறவினர்கள் கைலாசத்தை பல்வேறு இடங்களில் தேடிபார்த்தும் காணவில்லை. இதுகுறித்து அறந்தாங்கி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில், நிலைய அலுவலர் வெற்றிசெல்வன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கண்மாயில் இறங்கி தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.

உடல் மீட்பு

இந்நிலையில் நேற்றும் தேடும் பணி தொடங்கியது. இதையடுத்து நேற்று காலையில், கண்மாய் தண்ணீரில் மூழ்கிய நிலையில் இருந்த கைலாசத்தை தீயணைப்பு வீரர்கள் சடலமாக மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments