திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தனது வாட்ஸ்-அப் குழுவில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:-
மத்திய மண்டல துணை போலீஸ் சூப்பிரண்டுக்கள் மற்றும் அனைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். நானும் எனது போலீஸ் குழுவும் உங்கள் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் ரோந்து சென்று குட்கா, கஞ்சா போன்ற போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும். இதனை அந்த சரக துணை போலீஸ் சூப்பிரண்டுக்களும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும் போலீஸ் நிலையங்களை கண்காணிக்க வேண்டும். போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இது போன்ற போதை பொருட்கள் விற்பனையை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால் அந்த சரக துணை போலீஸ் சூப்பிரண்டுக்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளிவந்து வைரலாகி உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.