கறம்பக்குடி அருகே உள்ள மருதன்கோன் விடுதி நால்ரோட்டில் அரசு கலை அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு, 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற மாணவர்கள் மதியம் 12 மணியளவில் வகுப்புகளை புறக்கணித்து நால்ரோடு பிரதான சாலையில் திரண்டனர். பின்னர் அங்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 10 நிமிட போராட்டத்துக்கு பின் அனைவரும் மீண்டும் கல்லூரிக்கு சென்றனர். இதேபோல கறம்பக்குடியில் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் சீனி கடைமுக்கம், அம்புக்கோவில் முக்கம், அக்ரஹாரம், திருமணஞ்சேரி விலக்கு சாலை, ரெகுநாதபுரம் உள்ளிட்ட 10 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராகவும், எரிபொருட்களின் விலையை குறைக்க வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.