புதுகை மாவட்டத்தில் இதுவரை மழையினால் 1,729 எக்டேர் பயிர்கள் சேதம்! கலெக்டர் கவிதாராமு தகவல்!!



விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் கலெக்டர் கவிதாராமு பேசுகையில், ‘‘மழையளவை பொறுத்தவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 754.66 மில்லி மீட்டர் ஆகும். நவம்பர் மாதம் வரைக்கும் பெறப்பட வேண்டிய இயல்பான மழையளவான 678.50 மி.மீ. க்கு பதிலாக 1,170.4 மி.மீ. அளவு மழை பெறப்பட்டுள்ளது. இது இயல்பான மழையளவைவிட 72 சதவீதம் கூடுதலாகும். நவம்பர் மாதம் மட்டும் பெறப்பட வேண்டிய இயல்பான மழையளவு 133.53 மி.மீ.க்கு பதிலாக 317.1 மி.மீ இதுவரை பதிவாகியுள்ளது. 

பயிர் சேதத்தை பொறுத்தவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா பருவத்தில் 76,539 எக்டேர் சாகுபடி பரப்பளவில் தற்போது பெய்துவரும் மழையினால் 2,289.57 எக்டேர் நீரில் மூழ்கியுள்ளது. 

இதில் 33 சதவீதத்திற்கும் அதிகமாக 1,617.335 எக்டேர் நெற்பயிரானது பாதிக்கப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 2,766 பேர் ஆவர். இதே போல் மக்காச்சோளத்தில் 308 எக்டேர் பரப்பு நீரில் மூழ்கியுள்ளதில் 33 சதவீதத்திற்கு மேலாக 83.92 எக்டேர் பரப்பும், 117 விவசாயிகளும் பாதிப்படைந்துள்ளனர். உளுந்து மற்றும் நிலக்கடலைப் பயிர்களில் முறையே 6.4 எக்டேர் மற்றும் 24 எக்டேர் பரப்பு நீரில் மூழ்கியுள்ள நிலையில் 33 சதவீதத்திற்கும் அதிகமாக உளுந்து 4.4 எக்டேர் பரப்பும், நிலக்கடலை 23.63 எக்டேர் பரப்பும் பாதிப்படைந்துள்ளது. 

இதுவரை பெய்த கனமழையால் 2,628.63 எக்டேர் பரப்பில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ள நிலையில் 1,729.29 எக்டேர் பரப்பில் பயிர்கள் 33 சதவீதத்திற்கும் அதிகமாகப் பாதிப்படைந்துள்ளன. மேலும், வட்டார வாரியாக கணக்கெடுக்கும் பணி நடைபெற்றுவருகிறது’’ என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments