ஆவுடையார்கோவிலில் ஊராட்சி செயலாளர்கள் சங்க கூட்டம் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்




ஆவுடையார்கோவிலில் ஊராட்சி செயலாளர்கள் சங்க கூட்டம் ஒன்றிய தலைவர் சீனிவாசன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அனைத்து ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒன்றிய தலைவராக பூவலூர் ஊராட்சி செயலாளர் சீனிவாசனும், ஒன்றிய செயலாளராக பொன்னமங்களம் மதியும், பொருளாளராக வீரமங்களம் ஊராட்சி செயலாளர் கந்தையாவும், கவுரவ தலைவராக தீயத்தூர் ஊராட்சி செயலாளர் சாமிக்கண்ணு, துணைச் செயலாளராக பாண்டிபத்திரம் ஊராட்சி செயலாளர் பாண்டியராஜன் மற்றும் பல்வேறு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments