புதுக்கோட்டை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் மது தொடர்பான குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 24 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இந்த வாகனங்கள் வருகிற 28-ந் தேதி காலை 8 மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட கலெக்டரால் அமைக்கப்பட்ட குழு முன்னிலையில் ஏலம் விடப்பட உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் நபர்கள் இருசக்கர வாகனம் எடுக்க ரூ.2 ஆயிரமும், மூன்று சக்கர வாகனத்திற்கு ரூ.5 ஆயிரமும் மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.10 ஆயிரம் என முன்பணமாக செலுத்தி டோக்கன் பெற்று ஏலத்தில் கலந்துகொள்ளலாம்.
ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) மற்றும் 26-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை வாகனங்களை பார்வையிடலாம். ஏலத்தில் கலந்துகொள்ள விரும்பும் நபர்கள் ஏல முன் பணத்தொகையை 27-ந் தேதி மாலை 4 மணி முதல் 6 மணி வரை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள தற்காலிக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (மதுவிலக்கு அமலாக்க பிரிவு) அலுவலகத்தில் செலுத்தி டோக்கன் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.