சிறப்பான சுகாதார செயல்பாட்டில் தமிழ்நாடு 2-வது இடத்தில் இருப்பதாக ‘நிதி ஆயோக்’ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கேரளா முதல் இடத்திலும், உத்தரபிரதேசம் கடைசி இடத்திலும் உள்ளன.
நிதி ஆயோக் தயாரிப்பு
2019-2020 ஆண்டில் ஒட்டுமொத்த சுகாதார செயல்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களை தரவரிசைப்படுத்தி, மத்திய அரசின் ‘நிதி ஆயோக்’ அமைப்பு பட்டியல் தயாரித்துள்ளது. சுகாதார செயல்பாட்டின் முக்கிய அம்சங்கள் அடங்கிய 24 அளவுகோல்கள் அடிப்படையில் 4-வது ஆண்டாக இப்பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகத்துடன் இணைந்தும், உலக வங்கியின் தொழில்நுட்ப உதவியுடனும் பட்டியல் தயாராகி உள்ளது.
கேரளா, தமிழ்நாடு
இந்த பட்டியலில், பெரிய மாநிலங்களிடையே ஒட்டுமொத்த சிறப்பான செயல்பாட்டில், தொடர்ந்து 4-வது ஆண்டாக கேரளா முதல் இடத்தில் இருக்கிறது. தமிழ்நாடு 2-வது இடத்தில் இருக்கிறது. தெலுங்கானா மாநிலம் 3-வது இடத்தில் உள்ளது.
ஆனால், 2018-2019 ஆண்டில் இருந்து சுகாதார செயல்பாட்டை அதிகரித்தவகையில் பெரிய மாநிலங்களிடையே கேரளா 12-வது இடத்துக்கும், தமிழ்நாடு 8-வது இடத்துக்கும் தள்ளப்பட்டுள்ளன.
உத்தரபிரதேசம், டெல்லி
இந்த பட்டியலில் பெரிய மாநிலமான உத்தரபிரதேசம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. பீகார், மத்தியபிரதேசம் ஆகியவை கடைசிக்கு முந்தைய 2 இடங்களில் உள்ளன. ராஜஸ்தானும் மோசமான இடத்தில் உள்ளது. இருப்பினும், முந்தைய ஆண்டில் இருந்து செயல்பாட்டை அதிகரித்தவகையில், உத்தரபிரதேசம் முதல் இடத்தை பிடித்துள்ளது.
சிறிய மாநிலங்கள் அடங்கிய பட்டியலில், ஒட்டுமொத்த சுகாதார செயல்பாட்டில் மிசோரம், திரிபுரா ஆகியவை முதல் 2 இடங்களை பிடித்துள்ளன.
யூனியன் பிரதேசங்களிடையே டெல்லி, காஷ்மீர் ஆகியவை கடைசி இடங்களில் உள்ளன. ஆனால், முந்தைய ஆண்டில் இருந்து செயல்பாட்டை அதிகரித்தவகையில் முதல் இடங்களை பிடித்துள்ளன
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.