புதுக்கோட்டையில் சாராயம், போதை பொருட்கள் மற்றும் மதுப்பழக்கம் ஆகியவற்றால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து மாவட்ட அளவிலான விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. கோர்ட்டு வளாகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தை கலெக்டர் கவிதாராமு கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் முன்னிலை வகித்தார். சாராயம் மற்றும் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு கையேடு மற்றும் துண்டு அறிக்கையினை கலெக்டர் வெளியிட்டார். ஊர்வலத்தில் கல்லூரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பதாகையை கையில் ஏந்தி சென்றனர்.
ஊர்வலத்தில் கலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சிகளும் நடந்தது. ஊர்வலம் கீழராஜ வீதி, வடக்கு ராஜ வீதி வழியாக சென்று நகர்மன்றத்தில் நிறைவடைந்தது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, உதவி ஆணையர் (கலால்) மாரி, நகராட்சி ஆணையர் நாகராஜன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக போலீஸ் சூப்பிரண்டு நிருபர்களிடம் கூறுகையில், மாவட்டத்தில் கஞ்சா புழக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்கப்படுவதை தடுக்கவும், மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாவதை தடுக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. போதை பொருட்கள், குட்கா விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.