ஏப்ரல், மே மாதத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
பள்ளிகளில் பயன்பாட்டில் இல்லாத, சேதமடைந்த நிலையில் உள்ள கட்டிடங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. மேலும் சமீபகாலமாக பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இதுபற்றியும், கல்வித்துறையில் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்தும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று சென்னையில் ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-
1,600 பள்ளிகளில் பழைய கட்டிடங்கள்
பாலியல் துன்புறுத்தல்கள், பழைய கட்டிடங்கள் இடிப்பது போன்ற விஷயங்கள் குறித்து முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் இருந்து அறிக்கை பெற்றுள்ளோம். அந்த அறிக்கையின்படி ஆயிரத்து 600 பள்ளிகளில் பழைய கட்டிடங்கள் இருப்பது முதல்கட்டமாக கண்டறியப்பட்டு, இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க 14417 எண்ணை பள்ளி வளாகங்களில் அனைத்து இடங்களிலும் தெரியும்படி வைக்க அறிவுறுத்தி இருக்கிறோம். ‘மாணவர் மனசு’ புகார் பெட்டியும் வைக்கப்பட்டு வருகிறது. இவை அனைத்து பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறதா என்று கண்காணிக்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டு இருக்கிறோம்.
ஏப்ரல், மே மாதத்தில் பொதுத்தேர்வு
10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 3-வது வாரத்தில் முதல் திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டுவிடும். அது முடிந்தபிறகு, மார்ச் மாதத்தில் 2-வது திருப்புதல் தேர்வு நடத்தப்படும். அதன் தொடர்ச்சியாக ஏப்ரல் மாத இறுதியிலோ அல்லது மே மாதத்திலோ பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும்.
கட்டிடங்களை ஆய்வு செய்யும்போது அனைத்து இடங்களையும் ஆய்வு செய்ய வலியுறுத்தியுள்ளோம். இனிவரும் காலங்களில் நெல்லையில் நடந்த சம்பவங்கள் போல் நடக்காது. பழைய கட்டிடங்கள் இருக்கிறது என அனைத்து கட்டிடங்களையும் இடித்துவிட்டு, பிள்ளைகளை அமர்ந்து படிப்பதற்கு வகுப்பறை இல்லை என்று சொல்லிவிடக்கூடாது. அதனையும் கருத்தில்கொண்டு இடிக்கும் பணியை மேற்கொள்ள அறிவுறுத்தியிருக்கிறோம்.
கல்வித்துறையில் பள்ளிகளில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு நிதி தேவை என்று முதல்-அமைச்சரிடம் கேட்டு இருக்கிறோம். கண்டிப்பாக அவர் வழங்குவார். அதை வைத்து கட்டிடங்களை கட்டும் வேலைகளை செய்வோம். இந்த ஆண்டு இதற்காக ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தள்ளிவைக்கப்படுமா?
ஒமைக்ரான் பாதிப்பு உள்ள நிலையில், குழந்தைகளின் உடல்நிலைதான் எங்களுக்கு முக்கியம். வருகிற 3-ந் தேதி முதல் அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்க இருக்கின்றன. முதல்-அமைச்சர் அலுவலகத்தில் இருந்து ஏதாவது அறிவிப்பு வந்தால் மட்டுமே அனைத்து மாணவர்களுக்குமான நேரடி வகுப்புகள் குறித்த அறிவிப்பு தள்ளிவைக்கப்படும்.
‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்பதுதான் நம்முடைய நோக்கம். அதுவரையில் இத்தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான பயிற்சி வகுப்புகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.19 முதல் திருப்புதல் தேர்வு
தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல்கட்ட திருப்புதல் தேர்வு ஜனவரி 19-ல் தொடங்கும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்ட அறிவிப்பு;
நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களின் அடைவுத்திறனை சோதிக்கும் விதமாக 10, 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஜனவரி, மார்ச் மாதங்களில் முதல் மற்றும் 2-ம் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
முதல் திருப்புதல் தேர்வு ஜனவரி 19 முதல் 28-ம் தேதி வரை நடைபெறும்.
இரண்டாம் திருப்புதல் தேர்வு மார்ச் 21-ல் தொடங்கி 29-ம் தேதி வரை நடத்தப்படும்.
விரிவான தேர்வுக் கால அட்டவணையை பள்ளி ஆசிரியர்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும் எனவும், திருப்புதல் தேர்வில் பெறும் மதிப்பெண்களை முறையாக பதிவு செய்ய வேண்டும் எனவும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.