ஆன்லைனில் சீட்டு விளையாடி மகன் ரூ.2 லட்சத்தை இழந்ததால், மதுவில் விஷத்தை கலந்து குடித்து தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ரூ.2 லட்சம் கடன்
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் தெற்கு ரத வீதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 46). பூக்கடை நடத்தி வந்தார். இவரது மகன் செல்வகுமார் (25). இவர், தந்தைக்கு உதவியாக பூக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவர், ஆன்லைனில் சீட்டு(ரம்மி) விளையாடுவதற்காக சிலரிடம் ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் கடன் வாங்கி அதனை ரம்மி விளையாடி இழந்ததாக கூறப்படுகிறது. இதனால், வாங்கிய கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால், கடன் கொடுத்தவர்கள் அவருக்கு நெருக்கடி கொடுத்ததுடன் ஒரு வருடத்திற்குள் கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்று அவரிடம் எழுதி வாங்கியதாக கூறப்படுகிறது.
மகன் கடன் வாங்கியது குறித்து அறிந்த மாரிமுத்து மிகவும் வேதனை அடைந்தார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று மதுவில் விஷத்தை கலந்து குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு கீரனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீசார் மாரிமுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரிடம் விசாரணை நடத்தியபோது கடன் வாங்கிய தொகையை ஆன்லைனில் ரம்மி விளையாடி இழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.