மணமேல்குடி ஒன்றியத்தில் பொன்னகரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் இளங்கோவன் தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சிவயோகம் முன்னிலை வகித்தார். ஆராய்ச்சி இயக்குனர்களாக மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கல்வியாளர் மாரியப்பன் விழிப்புணர்வு குறித்து மாணவர்களிடையே ஆய்வு மேற்கொண்டு அதன் பின் மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் பல்வேறு காணொலிகள் படங்கள் மூலம் செயல்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
மாணவர்கள் சுனாமி, புயல், வெள்ளம், வறட்சி, தீ விபத்து, இடி, மின்னல், போக்குவரத்து, மற்றும் கூட்ட நெரிசல் இவைகளில் பாதுகாப்பு வழிமுறைகள் மாணவர்களுக்கு ஒரு நாள் பயிற்சியாக வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் பழனி நன்றி கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.