புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 441 மனுக்கள் பெறப்பட்டன!



ஒவ்வொரு திங்கட்கிழமைதோறும் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.

அதன்படி நேற்று கலெக்டர் கவிதாராமு தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மனு கொடுக்க பொதுமக்கள் ஏராளமானோர் வந்தனர். இதனால் மனுக்கள் பதிவு செய்யக்கூடிய இடத்தில் கூட்டம் அலை மோதியது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 441 மனுக்கள் பெறப்பட்டன. 

வழக்கமாக 300 முதல் 350 மனுக்கள் வரை பெறப்படும். ஆனால் நேற்று சற்றுகூடுதலாக பொதுமக்கள் வந்ததால் மனுக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. பெற்ற மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில் ஒரு மாற்றுத் திறனாளிக்கு ரூ.5 ஆயிரம் மதிப்பீட்டில் காதொலிக் கருவியும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.1,500 மதிப்பீட்டில் கைத்தாங்கியும் கலெக்டர் வழங்கினார். 

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கருப்பசாமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments