கோபாலப்பட்டிணத்தில் தொழிலதிபர் வீட்டில் 687 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு! திருச்சி சரக டி.ஐ.ஜி. நேரில் விசாரணை!!



மீமிசல் அருகே கோபாலப்பட்டிணத்தில் 687 பவுன் நகைகள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசலை அருகே உள்ள கோபாலப்பட்டிணம் பகுதியில் உள்ள தொழிலதிபர் ஜகுபர் சாதிக் வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கு பீரோக்கள், அலமாரி, பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த சுமார் 687 பவுன் நகைகளை நேற்று முன்தினம் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

சம்பவ இடத்தில் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் விசாரணை நடத்தினார். அதனைத்தொடர்ந்து திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் நேற்று நேரில் சென்று கொள்ளை சம்பவம் நடைபெற்ற வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments