கோபாலப்பட்டிணத்தில் இரண்டு ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் நூலகத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை!



கோபாலப்பட்டிணத்தில் இரண்டு ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் நூலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசல் அருகே நூலகம் இயங்கி வந்தது. இந்த நூலகத்தில் கோபாலப்பட்டிணம் கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நூலகத்திற்கு சென்று படித்து பயன் பெற்று வந்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகாலமாக இந்த நூலகம் பூட்டி கிடக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர்.

மேலும் நூலக கட்டிடம் பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்து ஜன்னல்கள் மோசமான நிலையில் காணப்படுகிறது. 3000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த கோபாலப்பட்டிணம் கிராமத்தில் உள்ள மாணவர்கள் தங்கள் அறிவுத்திறனை வளர்த்து கொள்ள நூலகம் மிக அவசியமானதாகும்.

எனவே நூலகத்தை உடனடியாக சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோபாலப்பட்டிணம் கிராமத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments