அறந்தாங்கி அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொல்காப்பியர் தமிழ் மன்றத் துவக்க விழா நடைபெற்றது. கல்லூரித் திருவள்ளுவர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் இரா. கண்ணன் அவர்கள் தலைமை தாங்கினார்.
தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு.திருவாசகம், வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் என்.கே.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக் கழக தமிழியல்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ஜெ.சந்திரகலா சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில், "நம்முடைய தாய்மொழியாம் தமிழ் மொழி தொன்மையானது. தமிழில் பேசுவதும், எழுதுவதும் அருகி வருகின்றது. பேச்சு வழக்கு மொழியிலும்கூட நிரம்ப குழப்பங்களும், மந்த நிலையும் காணப்படுகிறது. தமிழை முதன்மைப்பாடமாக பயின்றவர்கள், பயில்கிறவர்கள் அனைவரும் பிறமொழிக்கலப்பின்றி பேசவும், எழுதவும் வேண்டும். குறிப்பாக இன்றைய மாணவர்கள் நட்பைத் தேர்ந்தெடுப்பதில் மிகமிகக் கவனமாக இருக்க வேண்டும். திருவள்ளுவர் நட்பு குறித்து ஏழு அதிகாரங்களைப் படைத்துள்ளார். மனிதனின் வளர்ச்சியைப் பாதிக்கும் ஆணவம், செருக்கை நாம் அடியோடு அழிக்க வேண்டும். தமிழ் மண்ணில் தூய மனித நேயம் தழைக்க வேண்டும்" என்று பேசினார்.
முன்னதாகத் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் கா.காளிதாஸ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நிறைவாகத் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் தெ.தேன்மொழி நன்றி கூறினார். தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் வீ.சு.மாலதி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
விழா ஏற்பாடுகளைத் தமிழ்த்துறை பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.