கோட்டைப்பட்டினத்தில் புனரமைப்பு செய்யப்பட்ட அரசு பெண்கள் பள்ளி திறப்பு!!



புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் கோட்டைப்பட்டினம் பெண்கள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பழைய கட்டிடத்தை புனரமைப்பு  செய்து 3 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம்  மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயல்பட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சிவயோகம் தலைமையில் மணமேல்குடி  வட்டார கல்வி அலுவலர் முத்துக்குமார் கட்டிடத்தை திறந்து வைத்தார். 

சமூக ஆர்வலர் முகம்மது ஹாரிஸ் முன்னிலையில் பள்ளியின் தலைமையாசிரியர் அருளானந்து அனைவரையும் வரவேற்றார்.

கோட்டைப்பட்டினம்  பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட  கவுன்சிலர்கள், ஜமாத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள், தன்னார்வலர்கள், முன்னாள் மாணவர்கள் என அனைவரும் சேர்ந்து ஒரு லட்சத்து எண்பதாயிரம் ரூபாய் செலவில் அரசு பெண்கள் பள்ளியை புனரமைப்பு செய்தனர்.
இவ்விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் அக்பர் அலி, அஜ்மீர் கான், ஜமாத் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள்,  பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள்,  தன்னார்வலர்கள், முன்னாள் மாணவர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்

நன்கொடை வழங்கிய அனைத்து  நன்கொடையாளர்களையும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுலைமான் நன்றி கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments