கோபாலப்பட்டிணத்தில் மிதமான மழை!




கோபாலப்பட்டிணத்தில் மிதமான மழை!

தமிழகம் முழுவதும் கடந்த 2021 அக்டோபர் 25-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அன்றைய தினத்தில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் நவம்பர் மாதத்தில் கனமழை கொட்டி தீர்த்தது.

அதன் பின்னர் மழையின் தாக்கம் ஓரளவு குறைந்தது. மார்கழி மாதம் பிறந்ததில் இருந்து கடும் குளிர் நிலவியது. இந்த நிலையில் கடலோர மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட  மீமிசல் அருகேயுள்ள கோபாலப்பட்டிணத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது.  இன்று ஜனவரி 01 காலை 6 மணியிலிருந்து 7.30 மணி வரை விட்டு விட்டு வெயிலுடன் மழை பெய்தது 
 சில வாரங்களாகவே பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில் மாலை 5 மணியளவில் திடீர்  மழையால்  வெப்பம் தனிந்து குளுமையான காற்று வீசியது கோபாலப்பட்டிணத்தில்  கொட்டி தீர்த்த மழையால் சாலைகளில் மீண்டும் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. 
  கோபாலப்பட்டிணத்தில் அவ்வப்போது கரு மேகங்கள் சூழ்ந்து  மலைப்பிரதேசம் போல  குளிர் நிலவி வருகிறது.இதனால் கோபாலப்பட்டிணம் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.பொதுமக்கள்  புகைப்படம் & வீடியோவை எடுத்தும், ரசித்தும் பெருமகிழ்ச்சி அடைந்து வாட்ஸ்ஆப் ஸ்ட்டேஸ் மற்றும் சமூக வளைத்தளங்களில்  பதிவிட்டனர்

இது போன்று நமதூர்  மேகமூட்டம் மற்றும் இயற்கையான புகைப்படங்களை  எடுத்தால் எங்களுக்கு   அனுப்புங்கள். அதை தாராளமாக GPM மீடியாவில் பதிவிடுகிறோம்














எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments