இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ஜெகதாப்பட்டினம் மீனவர்களுக்கு காவல் நீடிப்பு




இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ஜெகதாப்பட்டினம் மீனவர்களுக்கு வருகிற 18-ந் தேதி வரை நீதிமன்ற காவலை நீடித்து அங்குள்ள கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

13 மீனவர்கள் கைது

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் பகுதியிலிருந்து கடந்த டிசம்பர் மாதம் 21-ந் தேதி இரண்டு விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி அவர்களை கைது செய்து இலங்கையில் உள்ள சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் 13 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி 13 மீனவர்களையும் வருகிற 18-ந் தேதி வரை நீதிமன்ற காவலை நீடித்து உத்தரவிட்டார். இதனையடுத்து மீனவர்கள் 18 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

விடுவிக்க கோரிக்கை

இதுகுறித்து தகவல் அறிந்த ஜெகதாப்பட்டினம் மீனவர்களும், மீனவர்களின் குடும்பத்தினரும் சோகத்தில் ஆழ்ந்தனர். இலங்கை கடற்படையினர் அத்துமீறி மீனவர்களை கைது செய்துள்ளனர். இதுபோன்ற சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இதுதொடர்பாக அரசியல் கட்சியினரும், அரசு அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments